மோசடி பேர்வழி கூப்பிட்டா மோடி ஏன் ஓடி வரணும்... ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன் சுளீர்
வனப் பகுதிகளை மோசடி செய்து ஆதிவாசி மக்களை ஏமாற்றி இடங்களை அபகரித்து வரும் மோசடி பேர்வழி ஜக்கி வாசுதேவ் கூட்டால் பிரதமர் மோடி ஏன் ஓடி வர வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி எழுப்பிய
சென்னை: ஈஷா யோகா மையத்தின் சார்பாக ஜக்கி வாசுதேவ் மகாசிவராத்திரியான நாளை சிவன் சிலை திறப்பு விழா நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிக்கு மோசடி பேர்வழியான ஜக்கி வாசுதேவ் அழைத்தால் பிரதமர் மோடி ஏன் ஓடி வருகிறார் என்று ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவையில் மேற்கு தொடர்ச்சி மலையில் அடிவாரத்தின் ஒரு பகுதியில் 112 அடி உயரத்தில் சிவனின் சிலையை ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஜக்கி வாசுதேவ் நாளை திறக்க உள்ளார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைக்கப்பட்டுள்ளார். ஆதிவாசி நிலங்களை மோசடி செய்துள்ள ஜக்கி வாசுதேவ் நிகழ்ச்சிக்கு பிரதமர் வரக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள், ஆதிவாசி கூட்டமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்பு போராட்டம் நடத்தி வருகின்றன.

இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், மலை அடிவாரத்தில் ஆதிவாசி மக்கள் குடியிருக்கும் பகுதிகளை ஏமாற்றி அபகரித்து கொண்டவர் ஜக்கி வாசுதேவ் என்றும் இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கிறது என்றும் கூறினார்.
ஒரு நாட்டின் பிரதமர் கார்ப்பரேட் சாமியாரின் நிகழ்ச்சி எப்படி வரலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பிய அரிபரந்தாமன், மோசடி பேர்வழி ஜக்கி வாசுதேவ் கூப்பிட்டால் ஏன் மோடி ஓடி வர வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈஷா யோகா மையத்தின் ஜக்கி வாசுதேவ் மீது, அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்கள், சலுகை விலையில் மின்சாரம், தொடர்ந்து கட்டுமானப் பரப்பை அதிகரித்துக் கொண்டே போவது உள்ளிட்ட பலவேறு வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. குறிப்பாக நாளை சிலை திறக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications