தீபா குறித்து பரபரப்பு தகவல்கள்... நாளை வெளியிடுகிறார் பசும்பொன் பாண்டியன்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடர்பாக பரபரப்பான தகவல்களை வெளியிடப் போவதாக தீபா பேரவையின் பசும்பொன் பாண்டியன் அறிவித்துள்ளார்.
சென்னை: தீபா அணியின் தென்மண்டல பொறுப்பாளராக இருந்த பசும்பொன் பாண்டியன் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளார். தீபா தொடர்பாக பரபரப்பான தகவல்களை வெளியிடப் போவதாக பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள், ஜெயலலிதா முகச் சாயல்.. இந்த காரணங்களுக்காக தீபாவை அதிமுகவின் ஒரு தரப்பினர் ஆதரித்தனர். தீபாவின் வீடு முன்பாக பெருமளவில் அதிமுக தொண்டர்கள் திரண்ட காலமும் இருந்தது.

இதை வைத்து தீபா தனி பேரவை, கட்சி தொடங்கினார். ஆனால் 8 மாதங்களாகியும் தீபாவின் பேரவையும் கட்சியும் போணியாகவில்லை. இப்போது தீபா அணியை கலைப்பதாக அதன் தென் மண்டல பொறுப்பாளர் பசும்பொன் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தீபா அணி கலைப்பு தொடர்பாகவும் தீபா குறித்தும் பரபரப்பான தகவல்களை நாளை சென்னை பிரஸ் கிளப்பில் வெளியிட இருப்பதாகவும் பசும்பொன் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications