துணிச்சலான முடிவு.. இந்தியா வல்லரசாக போகிறது.. மோடி அறிவிப்புக்கு ஆர்ஜே.பாலாஜி புகழாரம்
500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என மோடி அறிவித்திருப்பது சுதந்திரத்துக்கு பின் இந்தியாவில் எடுக்கப்பட்ட மிகத் துணிச்சலான ஒரு முடிவு என ரேடியோ ஜாக்கி பாலாஜி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை: ரூபாய் நோட்டுகள் குறித்த மோடியின் அறிவிப்பு இந்தியர்கள் அனைவரும் பெருமை படக்கூடிய வேண்டிய ஒரு விஷயம் என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.
ரேடியோ ஜாக்கியும் நடிகருமான பாலாஜி இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என பிரதமர் அறிவித்திருப்பதை எண்ணி மக்கள் பயப்பட வேண்டாம், பதட்டப்பட வேண்டாம், ஏடிஎம் மையங்களில் கூட வேண்டாம் என்பதை வலியுறுத்தியுள்ள அவர் அதன் அவசியத்தையும் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை இந்தியர்கள் அனைவரும் பெருமைபடக் கூடிய விஷயம் என தெரிவித்துள்ளார்.
மக்கள் பதட்டப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர் ஏடிஎம் மையங்களில் பணத்தை டெபாசிட் செய்ய நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மறுநாள் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விடும் என்றும் அதுவரை அவசர உதவிக்காக அக்கம் பக்கத்தினரிடம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
அவசர உதவி கேட்பவர்களுக்கு மக்கள் உதவ வேண்டும் என்று கூறியுள்ள பாலாஜி, மோடியின் இந்த அதிரடியால் இந்தியா 2020ல் நிச்சயம் வல்லரசாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications