ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து ஜனநாயக படுகொலை: டிடிவி தினகரன் சீற்றம்
ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது, ஜனநாயக படுகொலை என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா புகார்கள் அதிகரித்த நிலையில், வரும் 12ம் ததேதி அங்கு நடைபெறவிருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது. இதையடுத்து டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
டிவிட்டரில் அவர் இதுகுறித்து கூறியுள்ளதாவது: ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 9, 2017
முன்னதாக இன்று வெளியிட்டிருந்த டிவிட்டுகளில், வருமான வரித்துறையினர் எடுத்த ஆவணமாக இருந்திருந்தால் அது எப்படி வெளிவந்தது?அதற்கான உள்நோக்கம் என்ன? ஆவணத்திற்கான நம்பகத் தன்மை என்ன?
நாங்கள் வெற்றி பெற போகிறோம் என்பதால் அதை தடுக்க நீண்ட நாள் திட்டம் இது. இவ்வாறு கூறியிருந்தார்.