Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா : தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய ஹைகோர்ட் நோட்டீஸ்

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவல்துறையின் விசாரணை குறித்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணமடைந்ததைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலின் போது இதைத் தொடர்ந்து அத்தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க எந்த மாநிலத்திலும் நியமிக்கப்படாத மைக்ரோ அப்சர்வர்களையும் தேர்தல் ஆணையம் நியமித்தது. அதையும் மீறி அவ்வப்போது பறக்கும் படைகள் ரோந்து மேற்கொண்ட நிலையில் கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்தனர். எனினும் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை.

பணப்பட்டுவாடா

பணப்பட்டுவாடா

அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் லாட்ஜூகளிலும், பேருந்துகளிலும், நூதனமான முறைகளிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. தேர்தல் ஆணையத்திற்கு ஏராளமானோர் புகார்களை அனுப்பினர்.

ஐடி ரெய்டு

ஐடி ரெய்டு

இதனிடையே வருமான வரித்துறையினர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு நடத்தினர். அப்போது அவரது வீட்டில் ரூ.89 கோடி ரொக்கமும், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அனுப்பிய அறிக்கையை தொடர்ந்து ஆர்.கே நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

வழக்குப் பதிவு செய்ய உத்தரவு

பணப்பட்டுவாடா தொடர்பாக ஆளும் கட்சி மீது புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை பெற்றுக் கொள்ளவில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கறிஞர் எம்.பி. வைரக்கண்ணன் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பினார். வைரக்கண்ணனுக்கு தேர்தல் ஆணையம் அளித்த பதிலில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்ய தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்குப் பதிவு செய்யப்படவில்லை

வழக்குப் பதிவு செய்யப்படவில்லை

ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் வைரக்கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

உயர்நீதிமன்றத்தில் விசாரணை

உயர்நீதிமன்றத்தில் விசாரணை

அந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. காவல்துறையினரின் வழக்கு பதிவு, விசாரணை குறித்த ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+