ஆர்.கே.நகரில் போட்டியிட தேர்தல் ஆணையம் உறுதிமொழி தர வேண்டும்: ஈ.வி.கே.எஸ் நிபந்தனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி முடிவெடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிபந்தனை விதித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை அனுமதிக்க மாட்டோம்; பணம் விநியோகம் செய்ய உதவியாக இருக்கமாட்டோம்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நடந்து கொண்டது போல அதிகாரிகள் நடந்து கொள்ளமாட்டார்கள் என தேர்தல் ஆணையம் உறுதி அளிக்க வேண்டும்.
அப்படி தேர்தல் ஆணையம் உறுதி அளித்தால் மட்டுமே போட்டியிடுவது முடிவு எடுக்கப்படும். தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் ஜூன் 3-ந் தேதி நடக்கும் கட்சி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.












Click it and Unblock the Notifications