விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை எதிரொலி.. ஆர்.கே.நகர் தேர்தல் சிறப்பு அதிகாரி அவசர ஆலோசனை
சென்னை: சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், அலுவலகத்திலும் ஐடி அதிகாாரிகள் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு விஜயபாஸ்கர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஐடி துறை சோதனை நடத்தி வருகிறது. குவாரிகளிலும் சோதனை நடைபெறுகிறது.

இந்த நிலையில் விக்ரம் பத்ரா ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் இதுவரை ரூ.27 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் கரண் சின்ஹா கூறியுள்ள நிலையிலும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரி கொடுக்கும் பரிந்துரைப்படி, தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்பதால் ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications