ஆர்.கே. நகரில் 'சதி' அணிக்கு வாக்களிக்க வேண்டாம்- நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள்
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்களியுங்கள் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்றும் நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். 'சதி' அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் ஆர்.கே. நகர் வாக்காளர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளராக மதுசூதனன் களமிறங்கியுள்ளனர்.
திமுகவின் மருதுகணேஷ், தேமுதிகவின் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன், தீபா, நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
நடிகர் ஆனந்தராஜ்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் வாக்காளர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் கூறினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் ஆனந்தராஜ், டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
சதி அணி ( சசிகலா - தினகரன்)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறினார் ஆனந்தராஜ். சசிகலாவையும், தினகரனையும் இணைத்து சதி அணி என்று தெரிவித்தார் நடிகர் ஆனந்தராஜ்.
ஜெயலலிதாவிற்கு துரோகம்
ஆர்.கே. நகரில் தினகரனை வெற்றி பெறச் செய்தால் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே. நகர் மக்கள் துரோகம் செய்தது போலாகும் என்றும் கூறியுள்ளார். எனவே டிடிவி தினகரனைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று கூறினார் நடிகர் ஆனந்தராஜ்.
தரம் தாழ்ந்த அரசியல்
மேலும் பேசிய அவர், நடிகர் சரத்குமார் திடீரென்று டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டு பேட்டி அளித்துள்ளார். அதிமுகவை பிரிக்க மற்றவர்கள் சதி செய்வதாக கூறியுள்ளார். இது தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
வருமான வரி சோதனை செய்ய வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான் முறை என்றும் தெரிவித்தார் நடிகர் ஆனந்தராஜ். ஆர்.கே. நகர் மக்கள் சதி அணியைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறிய ஆனந்தராஜ், கடந்த சில மாதங்களாகவே சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராகவே கருத்துக்கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.