ஆர்.கே. நகரில் 'சதி' அணிக்கு வாக்களிக்க வேண்டாம்- நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள்
ஆர்.கே. நகரில் டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்களியுங்கள் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகரில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்றும் நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார். 'சதி' அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் ஆர்.கே. நகர் வாக்காளர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக அம்மா அணி வேட்பாளராக டிடிவி தினகரன் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி வேட்பாளராக மதுசூதனன் களமிறங்கியுள்ளனர்.

திமுகவின் மருதுகணேஷ், தேமுதிகவின் மதிவாணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் லோகநாதன், தீபா, நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
நடிகர் ஆனந்தராஜ்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.கே.நகர் வாக்காளர்களை யாராலும் விலைக்கு வாங்க முடியாது என்றும் கூறினார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து கருத்து கூறியுள்ள நடிகர் ஆனந்தராஜ், டிடிவி தினகரனைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.
சதி அணி ( சசிகலா - தினகரன்)
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சதி அணிக்கு வாக்களிக்க வேண்டாம் என கூறினார் ஆனந்தராஜ். சசிகலாவையும், தினகரனையும் இணைத்து சதி அணி என்று தெரிவித்தார் நடிகர் ஆனந்தராஜ்.
ஜெயலலிதாவிற்கு துரோகம்
ஆர்.கே. நகரில் தினகரனை வெற்றி பெறச் செய்தால் ஜெயலலிதாவுக்கு ஆர்.கே. நகர் மக்கள் துரோகம் செய்தது போலாகும் என்றும் கூறியுள்ளார். எனவே டிடிவி தினகரனைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்று கூறினார் நடிகர் ஆனந்தராஜ்.
தரம் தாழ்ந்த அரசியல்
மேலும் பேசிய அவர், நடிகர் சரத்குமார் திடீரென்று டிடிவி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து விட்டு பேட்டி அளித்துள்ளார். அதிமுகவை பிரிக்க மற்றவர்கள் சதி செய்வதாக கூறியுள்ளார். இது தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்
வருமான வரி சோதனை செய்ய வரும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான் முறை என்றும் தெரிவித்தார் நடிகர் ஆனந்தராஜ். ஆர்.கே. நகர் மக்கள் சதி அணியைத் தவிர்த்து யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் என்றும் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுகவில் இருந்து விலகுவதாக கூறிய ஆனந்தராஜ், கடந்த சில மாதங்களாகவே சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராகவே கருத்துக்கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications