'குக்கர்' கொடுத்த 'பிரஷர்'... ஆர்கே நகர் மக்களுக்கு திகட்ட திகட்ட கவனிப்பு!
Recommended Video

உலகிலேயே கொடுத்து வைத்தவர்கள் ஆர்கே நகர் தொகுதி வாக்காளர்களாகத்தான் இருக்க முடியும். வேறென்ன... ஆறு மாதத்துக்கு ஒருமுறை இடைதேர்தல் வருவதும், அப்படி வரும்போதெல்லாம் சரியான கவனிப்பு கிடைப்பதும்தான் காரணம். அதிலும் இந்த முறை ஆர்கே நகர் மக்களை தங்கத்தட்டில் வைத்து தான் தாங்குகின்றன கட்சிகள்.
கடந்த முறையாவது 5000 முதல் 15000 வரை கவனித்தார்கள். இந்த முறை அப்படி இல்லையாம். ஒரே தவணையாக கொடுத்தால் எதிர்தரப்பு கொடுத்து சரிகட்டி விடுகிறார்கள் என்று தினத் தவணையாக தரப்படுகிறதாம்.

அட்வான்ஸாக குக்கர் கொடுக்கப்பட்டு தினமும் ஒரு வீட்டுக்கு 500 ரூபாய் தரப்படுகிறதாம். தங்களது வாக்காளர்களை தங்கள் பக்கமே வைத்துக்கொள்ளத்தான் இந்த கவனிப்பு. அமைச்சர்கள் தரப்பும் இதற்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறது. வாக்காளர்களோ வேலைக்குக் கூடப் போகாமல் முழு நேரமும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் உதவியாளர்கள் வரவை எதிர்ப்பார்த்தபடி வாசலிலும் தெரு முனைகளிலும் காத்திருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் குக்கர் வென்றாலோ ஆளுங்கட்சியை விட அதிக வாக்குகள் பெற்றாலோ அது பிரஷரைத் தான் கொடுக்கும் என்பதால் தீவிரமாக வேலை பார்க்கிறார்கள் அமைச்சர்களும்.












Click it and Unblock the Notifications