ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி... சைதாப்பேட்டை சப்வே அருகே மறியல்... போக்குவரத்து முடக்கம்
சென்னை சைதாப்பேட்டையில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சென்னை: சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வேயில் ஏராளமான மக்கள் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் போராட்டம் மற்றும் எதிர்ப்புகளால் ஆளும் அதிமுக அரசு செய்வறியாமல் திணறி வருகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிரந்தர சட்ட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வே அருகில் அப்பகுதி பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் பீட்டாவை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகின்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications