கமல்ஹாசன் வீட்டு சுவரை தாண்டி குதித்த வாலிபர் பிடிபட்டார்.. ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு
Recommended Video

சென்னை: ஆழ்வார்பேட்டையில் கமல்ஹாசன் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வீடு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கமல்ஹாசன் கட்சி துவங்கி அரசியல்வாதியாகவும் பரிணமிக்க ஆரம்பித்த பிறகு, இங்கு ரசிகர்கள், தொண்டர்கள் என மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் கமல் வீட்டை சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாலிபர் ஒருவர் கமல்ஹாசன் வீட்டு சுவரை ஏறி வீட்டுக்குள் குதித்து பிடிபட்டுள்ளார். அவரை பாதுகாவலர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சுவர் ஏறி குதித்தவர் பெயர், சபரிநாதன் என்பதும், இவர் திட்டக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கமல்ஹாசன் வீட்டில் திருடுவதற்காக அவர் முயற்சி செய்தாரா என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications