For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் நாட்டுக்கு பலன்.. மோடிக்கு கனிமொழி கடிதம்

Google Oneindia Tamil News

Recommended Video

    2வது ராக்கெட் ஏவுதளம் அமைந்தால் நாட்டுக்கு பலன்..மோடிக்கு கனிமொழி கடிதம்- வீடியோ

    சென்னை: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் நகரிலுள்ள முத்தாரம்மன் கோயில் உலக பிரசித்தி பெற்றது. மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக, குலசை தசராதான் புகழ் பெற்றது. தசரா விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

    Rocket launch pad at Kulasekarapattinam: DMK MP Kanimozhi writes letter to the PM Modi

    இந்த நிலையில், குலசேகரபட்டினத்திற்கும் விண்ணியல் ஆய்விற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பூமத்திய ரேகை அருகேயுள்ள குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்தால், பெரும் செலவு மிச்சமாகும், பலன் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதனால், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கோரி, அப்பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

    இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு, திமுக எம்.பி. கனிமொழி இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

    குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்து, 2013ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி அன்றைய பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நான் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளேன். பூமத்திய ரேகை அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைத்தால் பெரும் பயன் கிடைக்கும். இவ்வாறு கனிமொழி கூறியுள்ளார்.

    English summary
    DMK MP Kanimozhi writes letter to the PM Modi to establishing a rocket launch pad at Kulasekarapattinam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X