சசிகலா புஷ்பாவுக்கு பாதுகாப்பு கொடுத்த ராக்கெட் ராஜா மீது மேலிடம் கடுப்பு.. என்கவுண்டருக்கு திட்டமா?
நெல்லை: நாடார் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜாவை கைது செய்துவிட வேண்டும் அல்லது என்கவுண்டர் செய்ய வேண்டும் என்று நினைத்து நெல்லை மாவட்டத்தில் அவரது சொந்த ஊருக்கு விரைந்த காவல்துறைக்கு ஏமாற்றமே கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை நிறுவனர் வெங்கடேச பண்ணையார், 13 வருடங்கள் முன்பு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் சென்னையில் வைத்து போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து அடுத்த மக்களவை தேர்தலிலேயே, திமுக சார்பில் களம் கண்ட வெங்கடேச பண்ணையார் மனைவி ராதிகா செல்வி எம்.பியானார்.
இந்நிலையில், வெங்கடேச பண்ணையாருக்கு நெருக்கமான, நாடார் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறார். தலைமறைவாக இருந்தபடியே வேண்டியற்றை சாதித்தும் வருகிறார் ராக்கெட் ராஜா.

கோபப்படுகிறார்களாம்
இந்நிலையில், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டபிறகு, சசிகலா புஷ்பாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ராக்கெட் ராஜா கையிலெடுத்துள்ளார். இதனால் ஜெயலலிதாவுக்கு 'நெருக்கமானவர்கள்' கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. வெங்கடேச பண்ணையாரை போலவே, ராக்கெட் ராஜாவையும் என்கவுண்டரில் கொல்ல போலீசாருக்கு அவர்கள் சமிக்ஞை கொடுப்பதாக கூறப்படுகிறது.

என்கவுண்டர் திட்டம்
ராக்கெட் ராஜா தலைமறைவாக உள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக முன்னாள் சுங்க இலாகா அதிகாரியும், ராக்கெட் ராஜாவின் சகோதரருமான சிவனேசன் குற்றம் சாட்டிவருகிறார்.

போலீஸ் ரெய்டு
இந்நிலையில் நேற்று இரவு ராக்கெட் ராஜா வீட்டில் போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டார்கள். ஆனால் ராஜா இல்லாததால், அவருக்கு சொந்தமான இரண்டு கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைமறைவு
ராக்கெட் ராஜாவை கைது செய்யவே, அவரது சொந்த ஊரான, நெல்லை மாவட்டம், திசையன்விளையடுத்த ஆனைகுடிக்கு போலீசார் சென்றுள்ளனர். ஆனால், போலீசார் வருவதை ராக்கெட் ராஜா முன்கூட்டியே அறிந்து கொண்டு, அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பிவிட்டார் என கூறப்படுகிறது.
-
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications