சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. நண்பரும் படுகாயம்.. 6 பேர் கும்பல் வெறிச்செயல்
6 பேர் கொண்ட கும்பல் அவரை தீச்சட்டி முருகனை சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த தீச்சட்டி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை: சென்னையில் பிரபல ரவுடி தீச்சட்டி முருகன் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சென்னை டி.பி.சத்திரத்தைச் சேர்ந்தவர் தீச்சட்டி முருகன். இவர் தனது நண்பருடன் இணைந்து டி.பி.சத்திரம் மெயின் ரோட்டில் மளிகைக் கடையும், காய்கறிக்கடையும் நடத்தி வந்தார்.

இவர் நேற்று இரவு 10 மணி அளவில் தனது கடையின் முன்பு நண்பர் நாராயணன் என்பவருடன் நின்றிருந்தார். அப்போது வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சூழ்ந்து கொணன்டு சரமாரியாக வெட்டி சாய்த்துவிட்டு தப்பியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த தீச்சட்டி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலைகாரர்கள் தாக்கியதில் நாராயணனும் படுகாயம் அடைந்தார். போலீஸ் பூத் அருகேயே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீச்சட்டி முருகன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இக்கொலை சம்பவம் நடந்துள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications