என்கவுன்ட்டரில் ரவுடி கொலை: நெல்லையில் பேருந்துகள் மீது கல்வீச்சு- பதற்றம்
நெல்லை: நெல்லை அருகே ரவுடி கிட்டப்பா என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் 6 பேருந்துகள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே இருக்கும் கான்சாபுரத்தைச் சேர்ந்தவர் கிட்டு என்கிற கிட்டப்பா(39). அவர் மீது கொலை, கொள்ளை, மணல் கடத்தல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கிட்டப்பாவை தேடி வந்த தனிப்படை போலீசாருக்கு அவர் நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியில் இருக்கும் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக கடந்த சனிக்கிழமை இரவு தகவல் கிடைத்தது.

தகவல் கிடைத்தவுடன் போலீசார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்று கிட்டப்பாவை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி முயற்சி செய்தார். இதையடுத்து போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடைய கிட்டப்பா மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், காவலர்கள் கிருஷ்ணசாமி, சரவணசுந்தர் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிட்டப்பாவின் உடல் வைக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேற்று சென்ற அவரது உறவினர்கள், ஆதரவாளர்கள் அவரை போலீசார் சுட்டுக் கொலை செய்ததை கண்டித்தனர். அங்கிருந்து கிளம்பிய அவர்கள் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி அருகே இருக்கும் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த அரசு பேருந்து மீது கல் வீசினர். மேலும் பழைய பேருந்து நிலையம் மற்றும் குலவணிகர்புரத்தில் தலா ஒரு அரசுப் பேருந்து மீது கல்வீசித் தாக்கினர்.
இது தவிர தருவையில் இருந்து சந்திப்பு நோக்கி வந்த மினி பேருந்து மீதும் கல் வீசினர். முன்னதாக சனிக்கிழமை இரவு நெல்லையில் இருந்து ஆத்தூருக்கு சென்ற அரசு பேருந்து மீதும், கே.டி.சி. நகர் பணிமனைக்கு சென்ற அரசுப் பேருந்து மீதும் கல் வீசித் தாக்குதல் நடத்தினர்.
பேருந்துகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக போலீசார் 22 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் ஆங்காங்கே பேருந்துகள் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications