ரவுடி ஸ்ரீதரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறதா?
காஞ்சிபுரம்: கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவது குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது என காஞ்சிபுரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொலை, ஆள்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரவுடி ஸ்ரீதர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஸ்ரீதர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Recommended Video

ஆனால் போலீசார் தரப்பில் இருந்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஸ்ரீதரின் உடலை பெற அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கம்போடியா சென்றுள்ளனர்.
ஸ்ரீதரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அங்குள்ள இந்திய தூதரகத்தின் உதவியை அவர்கள் நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீதர் போலி பாஸ்போர்ட்டில் சென்று தங்கியிருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அவரது உடலை கொண்டு வர காவல்துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுப்படவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரத்தில் அவரது தற்கொலையை உறுதி செய்து விரிவான தகவலை வெளியிடும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருவதாக கூறியுள்ளன.
இதனால் ஸ்ரீதரின் உடலைக் கொண்டு வருவது மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட அனைத்து தகவலும் கிடைக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரவுடி ஸ்ரீதரின் உடலைக் கொண்டுவ அவரது மகன் கம்போடியா புறப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications