துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்.. தமிழக அரசு அறிவிப்பு
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

இநந்லையில் தூத்துக்குடி தூப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும், தூப்பாக்கிச்சூடு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications