சென்னையில் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.4 லட்சத்தை லாக்கருடன் தூக்கி சென்ற கொள்ளையர்கள்! பரபரப்பு!
சென்னையில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 4 லட்சம் ரூபாய் பணத்தை லாக்கருடன் கொள்ளையர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாதவரம் அருகே தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 4 லட்சம் ரூபாய் பணத்தை லாக்கருடன் கொள்ளையர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த மாதவரத்தில் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நிதிக்கடன் அளித்து வருகிறது.

இந்நிலையில் இந்த நிதிநிறுவனத்தின் பின்பக்க கதவை உடைத்து ரூ. 4.25 லட்சம் திருடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் லாக்கருடன் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.
நிதிநிறுவனத்தில் பட்டப் பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications