தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல்: வரும் 24-ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேரந்த 57 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 57 இடங்களுக்கும் ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகியோரும், காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பனும் ஓய்வு பெறவுள்ளனர். இந்த பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2016 முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் அறிவிக்கை 24-5-2016 அன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டு, அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் ஆகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு 31-ம் தேதி கடைசி நாளாகும். 1-6-2016 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 3-6-2016 ஆகும். அதன்பின்னர் தேவைப்பட்டால் 11-6-2016 அன்று வாக்குப்பதிவு நடத்தப்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 13-6-2016 அன்று தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.05.2016 முதல் 31.05.2016 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881ஆம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு, தேவைப்படின், சட்டமன்ற குழுக்கள் அறையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
கரூரில் நெய்வேலி ரூட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்ஸ்டா பேஜை பார்த்தீங்களா? புதுசா இருக்கே! "மாஸ்டர்.."! -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை!












Click it and Unblock the Notifications