தமிழகத்தில் 6 காலியிடங்களுக்கு ராஜ்யசபா தேர்தல்: வரும் 24-ல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 14 மாநிலங்களைச் சேரந்த 57 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதில் தமிழகத்தில் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து இந்த 57 இடங்களுக்கும் ஜூன் 11ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், ரபி பெர்னார்ட் ஆகியோரும், திமுகவைச் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், தங்கவேலு ஆகியோரும், காங்கிரஸின் சுதர்சன நாச்சியப்பனும் ஓய்வு பெறவுள்ளனர். இந்த பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2016 முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் அறிவிக்கை 24-5-2016 அன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டு, அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் ஆகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு 31-ம் தேதி கடைசி நாளாகும். 1-6-2016 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 3-6-2016 ஆகும். அதன்பின்னர் தேவைப்பட்டால் 11-6-2016 அன்று வாக்குப்பதிவு நடத்தப்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 13-6-2016 அன்று தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.05.2016 முதல் 31.05.2016 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881ஆம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு, தேவைப்படின், சட்டமன்ற குழுக்கள் அறையில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications