சேலம் அருகே ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
சேலம் அருகே ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சேலம்: தாரமங்கலத்தில் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாராமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பூமிகா என்ற மாணவி 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த 2 நாட்களாக மாணவி பூமிகாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்நிலையில் மாணவி பூமிகா இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications