For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆளும் கட்சி சூரை தேங்காய் போல் சிதறி விட்டது.. துரைமுருகன் நக்கல்!

ஆளும் கட்சி சூரை தேங்காய் போல் சிதறிவிட்டதாக துரைமுருகன் நக்கலடித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஆளும் கட்சி சூறை தேங்காய் போல் சிதறிவிட்டதாக துரைமுருகன் நக்கலடித்துள்ளார். கருணாநிதி 3 மாதங்களாக பேசாமல் இருந்தாலும் திமுகவுக்குள் ஒரு சிறு அசைவு கூட இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதா இருக்கும் வரை ராணுவக் கட்டுக்கோப்புடன் இருந்தது அதிமுக. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சி அதிகாரப் போட்டியால் பல அணிகளாக சிதறி போயுள்ளது.

Ruling party was scattered like coconut: Duraimurugan

அதிமுகவின் இந்த நிலைமை பல்வேறு தரப்பினரின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சசிகலா தரப்புக்கு முன்னுரிமை கொடுப்பதே அணியில் ஏற்பட்டுள்ள இந்த பிளவுகளுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டசபை உறுப்பினர் வைர விழா குறித்த பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குறித்து பிளவு குறித்து பேசினார். ஜெயலலிதா என்ற ஒரு ஆள் போன பிறகு அதிமுக சூரை தேங்காய் போல் சிதறிவிட்டது என்றார்.

அதேநேரத்தில் திமுக தலைவர் கருணாநிதி 3, 4 மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் திமுகவில் ஒரு சிறு அசைவு கூட இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர் என்றும் துரைமுருகன் கூறினார்.

English summary
Duraimurugan said that the ruling party was scattered like coconut. He said Karunanidhi had not spoken for three months but there was no slight movement within the DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X