அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை- எஸ்.வி.சேகர்
ஜெயா டிவி லோகோவில் வருவது இரட்டை இலை இல்லை என்றும் அது பறக்கும் குதிரையின் இறக்கை என்றும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயா டிவி லோகோவில் வரும் இரட்டை இலை சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணி தேர்தல் ஆணையத்தை நாடவுள்ளதாக வந்துள்ள செய்தியை சுட்டிக் காட்டிய எஸ்.வி.சேகர், அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை என்று குறிப்பிட்டார்.
முடக்கப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம், கொடி, கட்சி என எல்லாம் மதுசூதனன் தலைமையில் உள்ள ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் கடந்த சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது.

மேலும் இதில் இரட்டை இலை விவகாரத்தில் தினகரன் அணியின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில் ஜெயா டிவியில் லோகோவில் ஒளிபரப்படும் இரட்டை இலை சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈபிஎஸ்- ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தை நாட போவதாக ஒரு பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை. 😜😜 pic.twitter.com/7kLNf0g6bJ
— S.VE.SHEKHER (@SVESHEKHER) November 27, 2017
இதை சுட்டிக்காட்டிய எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த லோகோ ரெட்டை இலை இல்லீங்கோ அது பறக்கும் குதிரையின் இறக்கை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications