யார் சிலையையோ வைத்து ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம்: எஸ்.வி.சேகர் பகீர்
ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோம் செய்துவிட்டதாக எஸ்.வி.சேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: யார் சிலையையோ வைத்து ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் துரோகம் செய்து விட்டதாக எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அவருக்கு வெண்கல சிலை ஒன்று வைக்கப்பட்டது. அந்த சிலை ஜெயலலிதா போல் இல்லை என்று சமூகவலைதலங்களில் கடும் விமர்சனம் செய்யப்பட்டது.

கேலி கிண்டலுக்குள்ளான இந்த சம்பவம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஜெயலலிதாவின் சிலை சீரமைக்கப்படும் என்றார் அவர்.
தங்களின் தலைவி ஜெயலலிதாவுக்கு அதிமுவினரின் சமீபத்திய துரோகம். யார் சிலையையோ செய்து அதுதான் ஜெயலலிதா சிலை என்று திறந்து வைத்ததுதான். அலட்சியத்தின் உச்சகட்டம். pic.twitter.com/t75zDoCxl0
— S.VE.SHEKHER (@SVESHEKHER) February 26, 2018
இதுகுறித்து எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், தங்களின் தலைவி ஜெயலலிதாவுக்கு அதிமுவினரின் சமீபத்திய துரோகம். யார் சிலையையோ செய்து அதுதான் ஜெயலலிதா சிலை என்று திறந்து வைத்ததுதான். அலட்சியத்தின் உச்சகட்டம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications