மதுரையைச் சேர்ந்த பெண் கலெக்டர் மரணம் – சகாயம் ஐ.ஏ.எஸ் நேரில் அஞ்சலி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த பெண் கலெக்டர் மரணமடைந்தார். அவரது உடலுக்கு மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டரும், கிரானைட் ஊழல் விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை நடத்தி வருபவருமான சகாயம் ஐ.ஏ.எஸ் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Sagayam condolences to lady collector’s death…

மதுரை கே.கே.நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா ரெங்கராஜன். இவர் மதுரை சட்டக்கல்லூரியில் சட்ட படிப்பை முடித்தவர். பின்னர் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று மேற்கு வங்காளம் ஹூக்ளி மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றினார்.

கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் மருத்துவ விடுப்பில் மதுரை வந்த அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை மரணமடைந்தார். அவரது உடலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.அரிபரந்தாமன், மதுரை முன்னாள் கலெக்டர் சகாயம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்ரீபிரியா ரெங்கராஜனின் கணவர் லஜபதிராய் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு அகிலன்ராய், கயல்ராய் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+