Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரானைட் மோசடி: நவம்பர் 23ல் அறிக்கை தாக்கல் செய்வாரா சகாயம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: கண்மாயைக் காணோம்... நிலத்தைக் காணோம்... தண்ணீர் வரத்துக் கால்வாய்களைக் காணோம், மலையைக் காணோம் என்று பலரும் புகார் கொடுத்து பகீர் கிளப்பிய கிரானைட் குவாரி மோசடி விசாரணையை முடித்து விட்டு ரிலாக்ஸ் ஆக இருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம். 11 மாதங்களாக 21 கட்டமாக நடத்திய விசாரணை அறிக்கையை வரும் 23ம் தேதி தாக்கல் செய்ய இருக்கிறார் சகாயம்.

கடந்த அக்டோபர் 15ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது நவம்பர் 23ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய இறுதிக்கெடு அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இம்முறை அவகாசம் கேட்காமல் தனது அறிக்கையை தாக்கல் செய்துவிடுவார் சகாயம் என்றே பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி விசாரணை ஆணையராக நியமிக்கப்பட்ட சகாயம். இரண்டு மாதங்களில் விசாரணை முடிக்க வேண்டும். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் வரை 21 கட்டமாக விசாரணை நடத்தியும், கள ஆய்வில் ஈடுபட்டும் பல ஆயிரம் பக்கங்களில் அறிக்கை தயாரித்துள்ளார்.

விசாரணையை துவக்கிய சகாயம்

விசாரணையை துவக்கிய சகாயம்

கடந்த டிசம்பர் 3ம் தேதி மதுரையில் சகாயம் விசாரணையை தொடங்கிய போது, அரசை ஏமாற்றியும், கிராம மக்களை மிரட்டியும் நிலங்களை அபகரித்து, விவசாய கால்வாய்கள், கண்மாய்களை ஆக்கிரமிப்பு செய்த கிரானைட் குவாரி உரிமையாளர்கள் பற்றி பொதுமக்களும், பல்வேறு அமைப்பினரும் புகார் கொடுத்தனர். காவல் துறையினரே தங்கள் நிலம் பறிபோனது பற்றி புகார் கொடுத்தனர்.

21 கட்ட விசாரணை

21 கட்ட விசாரணை

இந்த புகார்களின் அடிப்படையில் 21 கட்டங்களாக ஆய்வு நடத்தினார். கிரானைட் குவாரிகளால் மாயமான மலைகளும், அழிந்து போன கண்மாய்களும் தெரியவந்தன. இதற்கு காரணமான பல்வேறு துறை அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

நரபலி புகார்கள்

நரபலி புகார்கள்

விசாரணையின் இறுதிக்கட்டத்தில் நரபலி புகார் கிளம்ப, அதையும் தோண்டித் துருவியது குழு. சுடுகாட்டில் இரவில் தங்கினார் சகாயம். தமிழகம் முழுவதும் இது பரபரப்பை ஏற்படுத்தியது. நான்கைந்து எலும்புக்கூடுகளை தோண்டி எடுத்து கொடுத்துவிட்டுதான் தன்னுடைய விசாரணையை முடித்தார் சகாயம். இதனையடுத்து தன்னுடைய விசாரணை குறித்த அறிக்கையை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

அறிக்கை தயாரிப்பு

அறிக்கை தயாரிப்பு

கிரானைட் முறைகேடு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் 15ம் தேதி கடைசி தேதி ஆனால் ஆவணங்கள் தயாரிப்பு பணி நிறைவடையாததால் மேலும் ஒரு வாரம் அவகாசம் வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சகாயம் சார்பாக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.

நவம்பர் 23 இறுதிக்கெடு

நவம்பர் 23 இறுதிக்கெடு

இதனையடுத்து நீதிபதிகள், சகாயத்திற்கு வரும் 5 வார காலம் ( நவம்பர் 23ம் தேதி வரை) அவகாசம் வழங்கியதுடன், இதற்கு அவகாசம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கிரானைட் முறைகேடு குறித்து அறிக்கை முன்னதாக தயாரானால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் அறிவித்ததுடன் வழக்கை நவம்பர்23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சகாயத்தின் அறிக்கை

சகாயத்தின் அறிக்கை

பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களையும் சேர்த்து அறிக்கையாக தாக்கல் செய்யும் சகாயம், இதுவரை நடந்தது என்ன, இதனைச் சரி செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தகவல்களையும் அறிக்கையில் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயலை கிளப்புமா?

புயலை கிளப்புமா?

சகாயத்தின் அறிக்கையில் மலைகள், கண்மாய்கள் அழிப்பு, நரபலி குற்றச்சாட்டு, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதால், நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள அறிக்கை பெரும் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+