சென்னை மெரீனா புரட்சியில் கை கோர்த்த சகாயம் ஐஏஎஸ்! மாணவர்கள் உற்சாக வரவேற்பு! #SaveJallikattu
இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு புரட்சியில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொங்கல் பண்டிகை நாளில் இருந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
சாதாரண போராட்டமாக தொடங்கி இப்போது அமைதிப்புரட்சியாக வெடித்துள்ளது. அரசியல்வாதிகள், திரைப்பட நட்சத்திரங்களுக்கு இந்த போராட்ட களத்தில் இடமில்லை. மாணவர்கள், இளைஞர்கள், ஐடி ஊழியர்கள், பொதுமக்கள் பங்கேற்று மிகப்பெரிய வேள்வியை மெரீனாவில் நடத்தி வருகின்றனர்.

மெரீனா போராட்டம் உலக மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆதரவு தெரிவித்துள்ளார். மெரீனா கடற்கரைக்கு சென்று இளைஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
அரசியல்வாதிகளை புறக்கணித்த போராட்டக்குழுவினர், ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு வரவேற்பு அளித்தனர். பலரும் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பொங்கல் திருநாளன்று நாமக்கல்லில் பேசிய சகாயம் ஐஏஎஸ், வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நம் தமிழ் மண்ணில் அரங்கேறியிருப்பதாகவும், இது மரபுகளின் தொடர்ச்சி என்று கூறினார்.
எனவே கலாசாரத்தின் வெளிப்பாடான ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய சகாயம் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமையன்று மெரீனா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications