தமிழில் சிறந்த நாவல் சூல்.. எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு
சென்னை: இந்த ஆண்டுக்கான தமிழில் சிறந்த நாவலாக சூல் என்ற நாவல் சாகித்யா அகாடமியால் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதை எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசின் சார்பில் எழுத்தாளர்களுக்கான உயர்ந்த விருதுகளாக சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்படும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, 24 மொழிகளில் சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து அதை எழுதிய ஆசியர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அப்படி வழங்கப்படும் விருதுடன் ரூ.1,00,000 பணமும் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான (2019) தமிழில் சிறந்த நாவலாக 'சூல்' என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது அதை எழுதிய எழுத்தாளர் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஆவார். 66 வயதாகும் சோ.தர்மன், சூல், சோ. தர்மன் கதைகள். ஈரம், சொக்கவனம், கூகை உள்ளிட்ட பல நாவல்களை எழுதி இருக்கிறார். நிறைய விருதுகளை வென்று இருக்கிறார். இவருடைய புத்தகங்கள் பல பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.
கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்விலை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவராக போற்றப்படுகிறதார் சோ.தர்மன். சோ. தர்மராஜ் என்ற இயற்பெயர் கொண்ட இவர், சோ. தர்மன் என்ற பெயரில் எழுதுகிறார்.
கடந்த 2018ம் ஆண்டு சஞ்சாரம் என்ற நாவல் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டது. இதை எழுதிய எஸ் ராமகிருஷ்ணனுக்கு சாகியத் அகாடமி விருது வழங்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications