ஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாள் போலீஸ் காவல்
ஜெ.தீபா வீட்டில் போலி வருமான வரித் துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Recommended Video

சென்னை: ஜெ.தீபாவின் தி.நகர் வீட்டில் போலி வருமான வரித் துறை அதிகாரியாக நடித்த பிரபாகரனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை தி.நகர் சிவஞானம் சாலையில் உள்ள ஜெ.தீபாவின் வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரி என்று கூறி கொண்டு ஒருவர் வந்திருந்தார். அவர் பெயர் மித்தேஷ் குமார் என்றும் தெரிவித்தார்.

காலை 6 மணிக்கெல்லாம் வந்த அவர், 10 மணிக்கு மேலும் 10 அதிகாரிகள் வந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவரது நடவடிககையில் சந்தேகம் ஏற்பட்டதால் தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அந்த நபர் தப்பி ஓட்டம் பிடித்தார். பின்னர் கடந்த திங்கள்கிழமை அன்று அவராகவே மாம்பலம் போலீஸாரிடம் சரணடைந்தார். அவரிடம் நடந்த விசாரணையில் , சினிமா வாய்ப்பு தருவதாக மாதவன் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஒரு ஒத்திகை போல் தனது வீட்டுக்கு வருமான வரித் துறை அதிகாரி வேடத்தில் வருமாறு அவர் கூறியதாக அந்த நபர் தெரிவித்தார்.
அவரது பெயர் பிரபாகரன். புதுச்சேரியில் ஹோட்டல் வைத்துள்ளார். இதனிடையே மாதவன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் தான் கொடுத்த வாக்குமூலத்தில் உண்மையில்லை என்றும் மாதவனுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் மீண்டும் ஒரு வாக்குமூலத்தை அவர் கொடுத்தார்.
இந்நிலையில் பிரபாகரனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ஏராளமான தகவல்கள் விசாரணையில் கிடைக்க பெறும் என்றும் தெரிவித்தார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications