வர வர நம்ம கலெக்டர்கள் செய்யும் காரியங்களைப் பார்த்தால்..!
சென்னை: வர வர நம்ம ஊர் கலெக்டர்கள் மக்களை கதிகலங்க வைக்கும் வகையிரல் செயல்பட ஆரம்பித்துள்ளனர். சேலம் பக்கம் போனால் ரோகினி கலக்குகிறார்.
நெல்லைப் பக்கம் போனால் ஷில்பா பிரபாகர் மிரட்டுகிறார். சரி நீலகிரி கூலாக இருக்கும் என்று அங்கு போனால், இன்னொசன்ட் திவ்யா பிரமாதப்படுத்துகிறார்.
சரி எல்லோரும் நல்லதுதானே செய்கிறார்கள். பிறகு ஏனய்யா உமக்கு இந்த புலம்பல்.. இந்த கேள்வி உங்களது வாய் வரை வந்ததை நாம் அறிவோம்.. தொடர்ந்து படிங்க மக்கா!

ஷில்பா பிரபாகர்
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள கூனியூர் கிராமம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூனியூர் மெயின் சாலையில் அமைந்துள்ள 40 அடி உயரமுள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

40 அடி உயர தொட்டி
பின்னர், அங்குள்ள மகளிர் சுகாதார வளாகம் சுத்தமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பதையும் கழிவுநீர் ஓடைகள் முறையாகப் பராமரிப்பு செய்யப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். தெரு விளக்குகளை ஆய்வு செய்த அவர், எரியாத விளக்குகளை எல்.இ.டி பல்புகளாக மாற்றுமாறு உத்தரவிட்டார்.

105 அடி உயரம்
அதன் பிறகு நடந்ததுதான் யாரும் எதிர்பாராதது... சேரன்மகாதேவி நீதிமன்றம் எதிரே அமைந்துள்ள 105 அடி உயரமுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது விடுவிடுவென அவர் ஏற ஆரம்பித்தார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருடன் வந்திருந்த அதிகாரிகளில் சிலர் மேலே ஏறுவதற்கு அச்சப்பட்டார்கள்.

சுத்தம் செய்யாதது அம்பலம்
ஆனால், எதையும் கண்டுகொள்ளாத ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தொட்டியின் மீது ஏறி விட்டார். அங்கு ஆய்வு செய்தபோது அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்தார். அதனால் அந்தத் தொட்டியை உடனடியாக சுத்தம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதேபோல ஆய்வு தொடரும்
பின்னர் கீழே இறங்கி வந்த அவர், வழக்கமான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன். இதேபோல மாவட்டம் முழுவதும் சென்று ஆய்வு மேற்கொள்வேன். அதனால் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அதிகாரிகள் தங்களுடைய பகுதிகளைச் சிறப்பாக பராமரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலிருந்து கீழே பார்த்தால் தலை சுற்றிப் போகும் உயரத்தில் உள்ள குடிநீர் தொட்டி மீது கடகடவென ஏறி இறங்கிய ஷில்பாவைப் பார்த்து அங்கிருந்து ஆச்சரியப்பட்டுப் போயினர்.

ராவும் இப்படித்தான்
கடந்த சில தினங்களுக்கு முன் மதுரை ஆட்சியராக இருந்த வீரராகவராவ் நுாறடி உயர தொட்டியில் ஏறி ஆய்வு நடத்தினார். தற்போது நெல்லை ஆட்சியரும் ஆய்வு நடத்தியுள்ளார். இதேபோல சேலம் கலெக்டர் ரோகினியும் அவ்வப்போது இது போல ஏதாவது செய்கிறார். சிமெண்ட்டை எடுத்து பூசுகிறார். தெருவைக் கூட்டுகிறார். பாடம் நடத்துகிறார். பல அவதாரம் செய்து கமலுக்கு கடும் போட்டியாக திகழ்கிறார்.

உயிர் முக்கியம் இல்லையா
இது நல்ல விஷயம் தான் என்றாலும் ஒரு மாவட்டத்தை கவனிக்கும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆபத்தான இந்த செயலை செய்வது தேவையற்றது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை வைத்தே இதை செய்யலாம். அதிகாரிகளின் வற்புறுத்தலால் தான் இது போன்ற நடக்கிறதா என கேள்வியும் எழுகிறது.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications