வெடித்துச் சிதறிய “பிரிட்ஜ்” - 13 வயது சிறுமி பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சியில் பிரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் 13 வயது சிறுமி பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்தின் போது அந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் 2 சகோதர்களும் வெவ்வேறு வேலைக்காக வெளியே சென்றிருந்தனர்.

இதனால், வீட்டில் தனியாக இருந்துள்ளார் அந்த சிறுமி. இந்நிலையில் உயர் மின் அழுத்தம் ஏற்பட்டதில் திடீரென பிரிட்ஜ் வெடித்து சிதறியது.
எதிர்பாராமல் நடைபெற்ற இவ்விபத்தில் சிக்கிய அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications