6வது படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்த 60 வயது முதியவர் – மகன்களுடன் கைது!
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவரும், தந்தையை காப்பாற்ற முயன்ற மகன்களும் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சமுத்திரம்பச்சான்வளவு பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கு வயல்வெளியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது காளியப்பன் என்பவர், பள்ளி மாணவியிடம் பேச்சுக் கொடுத்தபடி, திடீரென பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அழுது கொண்டே வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறியுள்ளார். அந்த மாணவியின் தந்தை தனது மகளுடன் வந்து காளியப்பனிடம் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காளியப்பனின் இரு மகன்களும் மாணவியின் தந்தையைத் தாக்கியுள்ளனர். இதையடுத்து மாணவியின் தந்தை எடப்பாடி போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விரைந்து சென்று காளியப்பன், மற்றும் அவரது 2 மகன்களைக் கைது செய்தனர். இந்த வழக்கு சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. கைதான 3 பேரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications