சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்... வேல்முருகன்
சென்னை: சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் தனித்துவ அடையாளங்களில் ஒன்றாக திகழும் சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் முயற்சியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

சேலத்தில் 1970-ம் ஆண்டு திட்டம் உருவாக்கப்பட்டு 1981-ம் ஆண்டு குளிர் உருட்டாலை தொடங்கப்பட்டது. இரும்பு சுருள்களை வெளியில் இருந்து வாங்கி வந்து உற்பத்தி நடத்தி வந்தது சேலம் இரும்பாலை.
1995ம் ஆண்டு இரும்பு சுருள்களை உற்பத்தி செய்யும் வெப்ப உருட்டாலையும் சேலத்திலேயே தொடங்கப்பட்டது. இதற்கான மூலதன பொருளான ஸ்லாப்புகளை இங்கேயே தயாரிக்க 2010ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி செலவில் எஃகு உற்பத்தி கூடம் தொடங்கப்பட்டது.
தற்போது சேலம் உருக்காலையில் ஆண்டுக்கு 70 ஆயிரம் டன் பொருட்கள் குளிர் உருட்டாலையிலும், 3.95 லட்சம் டன் பொருட்கள், வெப்ப உருட்டாலையிலும், 1.80 லட்சம் டன் பொருட்கள் எஃகு உற்பத்தி கூடத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே துருப்பிடிக்காத எஃகு மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடம் சேலம் உருக்காலையில் தான் முதன் முதலில் தொடங்கப்பட்டது.
இந்த உருக்காலையில் 300 அதிகாரிகள், 1,000 நிரந்தர பணியாளர்கள், கூட்டுறவு சங்கம் மூலம் பணியாற்றுபவர்கள் 350 பேர், 500 ஒப்பந்த பணியாளர் என 2,500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உருக்காலை மூலம் மறைமுக வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இப்படி தமிழர்களின் நிலத்தில் தமிழர்களின் உழைப்பில் உருவான இந்த இரும்பாலையை கடந்த பல ஆண்டுகளாகவே தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சேலம் இரும்பாலையை திட்டமிட்டு நட்டத்தில் இயங்கி வைக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.
ஆண்டுக்கு ரூ.100 கோடி வரை லாபத்தில் இயங்கி வந்த உருக்காலை தற்போது ரூ.450 கோடி வரை நட்டத்தில் இயங்கி வருகிறது. சேலம் உருக்காலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த, மத்திய விற்பனை மையம் கொல்கத்தாவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் உருக்காலையின் வாடிக்கையாளராக இருந்த 70 நிறுவனங்கள் படிப்படியாக குறைந்து, தற்போது 9 நிறுவனங்கள் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளன. இப்படியான செயற்கையான நட்டத்தை காரணம்காட்டி ஒட்டுமொத்தமாக சேலம் இரும்பாலையை அப்படியே தனியாருக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற்சித்து வருவது கடும் கண்டனத்துக்குரியது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் நடத்தில் இயங்குகிறது என கருதினால் உரிய அதிகாரிகளை நியமித்து அதை லாபத்தில் இயங்க வைப்பதற்கு பதிலாக அப்படியே தனியாருக்கு தாரைவார்த்தால் அந்த இரும்பாலையை இத்தனை ஆண்டு காலம் நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பது குறித்து கிஞ்சித்தும் சிந்திக்காமல் மத்திய அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது. ஆகையால் சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக அரசும் உடனே தலையிட்டு சேலம் இரும்பாலையை தனியாருக்கு தாரைவார்ப்பதை தடுத்து நிறுத்த போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டி வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
- இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications