Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் ஷாக் சம்பவம்.. ஹோட்டல் மாடியிலிருந்து குதித்த 2 மாணவிகள்.. ஒருவர் பலி!

சேலத்தில் காணாமல் போன 8ம் வகுப்பு மாணவிகளில் ஒருவர் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து பலியானார். மற்றொரு மாணவி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சேலத்தில் ஷாக் சம்பவம்.. ஹோட்டல் மாடியிலிருந்து குதித்த 2 மாணவிகள்.. ஒருவர் பலி!- வீடியோ

    சேலம்: சேலத்தில் காணாமல் போன 2 மாணவிகள் ஓட்டலின் மாடியில் இருந்து குதித்ததில் ஒருவர் பலியாகியுள்ளார். 2வது அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓட்டலின் மாடியில் இருந்து 2 பேரும் குதித்துள்ளனர்.

    படுகாயமடைந்த மற்றொரு மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
    அரிசிபாளையம் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த கவிஸ்ரீ, ஜெயராணி நேற்று காணாமல் போயினர்.

    மாணவிகள் நேற்று பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இரவு முழுவதும் போலீசார் தேடி வந்தனர்.

    மாணவி தலை உடைந்து மரணம்

    மாணவி தலை உடைந்து மரணம்

    சேலம் அக்ரஹாரம் பகுதியில் பூட்டிக்கிடந்த ஒரு விடுதியில் பின்புறமாக ஏறிச்சென்று 4வது மாடியில் இருந்து குதித்தனர். இதில் சம்பவ இடத்திலேயே மாணவி ஜெயராணி தலை உடைந்து உயிரிழந்தார்.

    உறவினர்கள் கதறல்

    உறவினர்கள் கதறல்

    மற்றொறு மாணவி படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்கமான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளின் உறவினர்கள் மருத்துவமனை வாசலில் கண்ணீருடன் காத்துக்கொண்டுள்ளனர்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    மாணவிகள் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆவார். இருவரும் பேசிக்கொண்டே இருந்ததால் ஆசிரியை இடம் மாற்றி அமர வைத்தாராம். இதனால் மனமுடைந்த மாணவிகள் மாயமானதாக கூறப்படுகிறது. மாணவிகளின் தற்கொலைக்கு காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    4 மாணவிகள் தற்கொலை

    4 மாணவிகள் தற்கொலை

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே ஆசிரியை திட்டியதால் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்திற்கு காரணமாக ஆசிரியைகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஒரு மாதத்திற்குள்ளாக சேலத்தில் மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு பாடங்களுடன் கவுன்சிலிங் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+