அதிகாரிகள் அலட்சியம்... சேலம் மாணவி ஜீவிதாவின் மருத்துவ கனவு பலிக்காமல் போன அவலம்

சேலம் மாணவி ஜீவிதாவுக்கு இரு ஹால்டிக்கெட்டுகள் வந்துள்ளதால் அவர் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நீட்..அராஜகமாக நடத்தப்பட்ட சோதனைகள்-வீடியோ

    சேலம்: சிபிஎஸ்இ அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக சேலத்தை சேர்ந்த மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கனவு பலிக்காமல் போன நிலை ஏற்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஜீவிதாவுக்கு சேலத்தில் கொண்டலாம்பட்டி சவுடேஸ்வரி தனியார் கல்லூரியில் தேர்வு எழுத நுழைவுச் சீட்டு வந்துள்ளது. இதையடுத்து அவர் இன்று அந்த கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றார்.

    Salem student not allowed for Neet as she receives 2 hall tickets

    அப்போது கொண்டலாம்பட்டி கல்லூரியில் மாணவியின் தகவல்களை சரிபார்த்த அதிகாரிகள் அவர் பணம் கட்டவில்லை என்று கூறினர். இதையடுத்து பணம் கட்டாமல் ஹால்டிக்கெட் எப்படி அனுப்புவார்கள் என்று பெற்றோர் வாக்குவாதம் செய்தனர்.

    இதையடுத்து அந்த மாணவியின் பதிவு எண் 5-இல் ஆரம்பிக்கிறது. எனவே அவருக்கு கோட்டயத்தில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் கொண்டலாம்பட்டி கல்லூரியில் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.

    இதனால் மருத்துவர் கனவுடன் வந்த ஜீவிதா நொறுங்கி போய் வேதனை தெரிவித்தார். அதிகாரிகளிடம் எவ்வளவோ கூறியும் அவர்கள் அந்த பெண்ணை அனுமதிக்கவில்லை.

    தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்த அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மாணவி ஜீவிதா வேறு வழியின்றி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+