"அம்மா"வை பார்க்க வந்து மகளை தொலைச்சுட்டேனே.... ஜெ.வுக்கு சேலம் பெண் கதறல் மனு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவி கேட்க வந்த இடத்தில் மனவளர்ச்சி குன்றிய மகளை தொலைத்து விட்டு தேடி வருகிறார் ஒரு முதிய தாய். மகளை கண்டுபிடித்து தர முதல்வர் செய்ய வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
மகளை தொலைத்துவிட்டு தேடும் பெண்ணின் பெயர் சரஸ்வதி. கணவர் ராமசாமி 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
சரஸ்வதி - ராமசாமி தம்பதிக்கு பூவாயி, இந்திராகாந்தி, காந்திமதி என்ற 3 பெண்களும், கம்பர் என்ற ஒரு பையனும் இருக்கிறான். இவர்கள் குடும்பத்தோடு வாழப்பாடி அருகில் உள்ள ஏத்தாப்பூரில் குடியிருந்தனர்.

2 பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட சரஸ்வதி, தனது சொந்த வீட்டில் காந்திமதி, கம்பருடன் வசித்து வந்தார்.
இவர்கள் இருவரும் சற்று மன நிலை பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏத்தாப்பூரில் யாருடைய ஆதரவும் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரர்கள் சரஸ்வதியை ஏமாற்றி நிலத்தையும், வீட்டையும் பிடுங்கிக் கொண்டு துரத்தி விட்டார்களாம். உறவினர்கள் யாரும் உதவாத நிலையில், முதல்வரிடம் உதவி கேட்க சென்னை வந்துள்ளனர். வந்த இடத்தில் மகளை தொலைத்து விட்டு தவித்து வருகிறார் சரஸ்வதி.
கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார் சரஸ்வதி. டி.வி.,யில் எல்லா மக்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா அம்மா உதவி செய்வதைப் பார்த்தோம். எங்களுக்கும் உதவி செய்வாங்க என்று நம்பி,நானும் என் பையன் கம்பர், என் மகள் காந்திமதியும் ரயில் ஏறி மெட்ராஸ்க்கு போனோம். இருட்டி விட்டதால் ரயில்வே ஸ்டேஷனிலேயே 3 பேரும் படுத்து உறங்கினோம்.
விடிந்ததும் எழுந்து பார்த்த போது என் மகள் காந்திமதியைக் காணவில்லை. கதறி அழுது கொண்டு ஒவ்வொரு இடமாகத் தேடினோம். காணவில்லை. பிறகு தலைமை செயலகத்திற்குச் சென்று விஷயத்தைச் சொல்லி அழுதோம். அங்கே எங்கள் புகாரை வாங்கிக் கொண்டு அனுப்பி விட்டாங்க.
என் மகள் காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது. எங்க போனதோ, யார் பிடிச்சுட்டுப் போயிட்டாங்களோ என்று தெரியலையே. கடவுள் மாதிரி இருக்கிற முதல்வர் அம்மாதான் என் மகளை கண்டுபிடித்துத் தர வேண்டும்.
நாங்க நிரந்தரமாக எங்க வீட்டில் குடியிருக்க அம்மா உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் சரஸ்வதி. முதிய பெண்மணியின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பாரா முதல்வர் ஜெயலலிதா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications