தூத்துக்குடியில் அழிந்து வரும் உப்பள தொழில்.. தொழிலாளர்கள் கவலை
தூத்துக்குடியில் உப்பு தொழில் நசிந்து வருவதால் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் உப்பு தொழில் நசிந்து வருவதால் தொழிலாளர்கள் கவலையில் உள்ளனர். சமீப காலங்களில் போதுமான அளவு உப்பு உற்பத்தி செய்யப்படுவதில்லை.
இந்தியாவில் உப்பு உற்பத்தியில் தூத்துக்குடி இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை தூத்துக்குடியில்தான் உப்பு உற்பத்தி அதிகமாக நடக்கிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்புகள் தோல் தொழிற்சாலைகள், மீன்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மற்ற இடங்களில் விளையும் உப்பை விட தூத்துக்குடியில் உள்ள உப்பு சுவை மிகுந்ததாக இருப்பதால் இதற்கு எப்போதும் அதிக கிராக்கி உண்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், குளைச்சல், தருவைகுளம், முத்தையாபுரம், முள்ளங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் உப்பு உற்பத்திக்கு தேவையான தண்ணீர் கடலில் இருந்து நேரடியாக கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்போது கடற்கரை ஓரம் தொழிற்சாலைகள் பெருகி வருவதால் அதில் இருந்து வெளியேறும் கழிவுகள், புகைகள் பட்டு உப்புகள் சேதம் அடைவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் உப்பின் தரமும் குறைவாக புகார் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால் உப்பு உற்பத்திக்கு தேவையான நீர் கிடைக்காமல் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த பிரச்சனையால் உப்பு தொழிலை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
காஞ்சிபுரத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 39 காலியிடங்கள்! சூப்பர் சான்ஸ் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications