சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவி உயர்வு
சென்னை: சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி கவுல், உச்ச நீதிமன்ற நீதிபதியாக விரைவில் நியமிக்கப்பட உள்ளார்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த இப்ராகீம் கலிபுல்லா வரும் 22ம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரோடு சேர்த்து 3 நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளந.
புதிய நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்காக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு அவசர கூட்டம் நடத்தியது. இந்த 3 காலியிடங்களுக்கும் 3 உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை அந்த குழு தேர்வு செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப், கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ஆகியோர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில், இவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகின்றனர்.