சட்ட விரோத குற்றவாளிகளா தமிழக மீனவர்கள்?: சரத்குமார் கொதிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக பல்வேறு பொருட்களை கடத்திச் செல்கிறார்கள். இந்தியக் கடற்பகுதியை மீறிச் செல்கிறார்கள் என்று ஒட்டுமொத்த மீனவர்களையும் சட்ட விரோதக் குற்றவாளிகளாக அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்று சமக தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம், இலங்கை மீனவர்களால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தக்க பாதுகாப்பை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Sarath Kumar condemns Indian govt

இந்த வழக்கில் கடலோர காவல்படை உயர் அதிகாரி நாட்டியால் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த வாக்குமூலத்தில் தமிழக மீனவர்கள் சட்ட விரோதமாக பல்வேறு பொருட்களை கடத்திச் செல்கிறார்கள். இந்தியக் கடற்பகுதியை மீறிச் செல்கிறார்கள் என்று ஒட்டுமொத்த மீனவர்களையும் சட்ட விரோதக் குற்றவாளிகளாக அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

தங்களுடைய பணியை ஒழுங்காக செய்யாமல், ஒட்டுமொத்த மீனவர்களையும் குற்றம் சாட்டுவதுபோல் வாக்கு மூலம் அளித்துள்ள கடற்படை காவல் அதிகாரியைக் கண்டிப்பதோடு, இந்த வாக்கு மூலத்தைத் திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+