அதெப்படி அதிகாரிகளால் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.. கேட்கிறார் சரத்!
சென்னை: இடி விழுந்ததால்தான் சென்னை மவுலிவாக்கத்தில் 11 அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்ததாக நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
நேற்று சம்பவ இடத்தை அவர் பார்வையிட்டார். மீட்புப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

முதல்வர் பார்த்துள்ளாரே..
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், விபத்து நடந்த இடத்தில் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டார். இதில் நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார்.

இடிதான்…
இடி விழுந்ததால் இந்த கட்டிடம் இடிந்து போனது.

எல்லாவற்றையும் நேரில் பார்க்க முடியாது
அரசு அதிகாரிகள் அனுமதி அளித்த கட்டிடங்கள் அனைத்தையும் நேரில் சென்று பார்க்க முடியாது.

மக்களுக்குத்தான்…
அனுமதி அளித்த பின் அந்த கட்டிடத்தின் வடிவமைப்பாளரிடம் அரசு சார்பில் கட்டிட உறுதி சான்று அளித்த பிறகே பொதுமக்கள் குடியேற வேண்டும் என்றார் சரத்குமார்.

“அறிவோடு” இருங்கள் மக்களே…!
சரத்குமார் சொல்வதைப் பார்த்தால் மக்களுக்குத்தான் "அறிவு" இருக்க வேண்டும் என்று சொல்வது போலவே இருக்கிறதே....!












Click it and Unblock the Notifications