கோர்ட்ல பார்த்துக்கிறோம்!- சரத்குமார்
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழுக்கூட்டத்தில் எங்களை நீக்கியது தன்னிச்சையாக எடுக்கப்பட்டுள்ள முடிவு. அதை சட்டப்படி நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் சரத்குமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தென்னிந்திய நடிகர் சங்க பொதுக் குழு கூட்டம் நடந்துள்ளது என கூறியிருப்பது விதிகளின்படி சரியானதா என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, அந்தக் கூட்டத்தின் மூலம் எங்களை நிரந்தரமாக நீக்கியுள்ளதாக கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

ஏற்கெனவே, தாற்காலிக நீக்கம் செய்துள்ளதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நிரந்தர நீக்கம் எனக் கூறுவது சட்டத்திற்கு உள்பட்டதல்ல, அதற்கு புறம்பானதாகும். இந்த நிலையில், என்னைத் தொடர்புகொண்டு தங்களது உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்ட ரசிகர்களுக்கும், இயக்கத்தின் சகோதர சகோதரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, தென்னிந்திய நடிகர் சங்கப் பொது குழுக்கூட்டத்தில் எடுத்துள்ள தன்னிச்சையான முடிவை சட்டத்தின் மூலம் நீதிமன்றத்தில் முறையிட்டு தீர்வு காண்போம். ரசிகர்கர்களும், தொண்டர்களும் அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sarathkumar says that he would challenge the dismissal from Nadigar Sangam in the court.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications