பாஜகவுடன் தேமுதிக - பாமக இணைந்தால் இது 'மெகா' கூட்டணியாக அமையும்: சரத்குமார்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் தேமுதிக, பாமக இணைந்தால் அந்த அணி மெகா கூட்டணியாக அமையும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட சமத்துவ மக்கள் கட்சி தற்போது அந்த கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து சந்திக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே அக் கட்சியின் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் சரத்குமார் நேற்று நேர்காணல் நடத்தினார். நேர்காணலுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், எங்கள் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறோம்.
இந்த கூட்டணிக்கு தே.மு.தி.க., பா.ம.க. வந்தால் மெகா கூட்டணியாக அமையும். திமுக, அதிமுகவுக்கு பதிலாக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
மேலும், அதிமுக கூட்டணியில் நான் இருந்தபோது, அரசியல் ரீதியாக விஜயகாந்தை விமர்சித்திருப்பேன். விஜயகாந்த் எனது பாசத்துக்குரிய சகோதரர். தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications