ஜெயலலிதா முன்னிலையில் எம்.எல்.ஏவாக பதவியேற்றார் சரோஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சரோஜா, முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக்கு கடந்தம 4ம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில், அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாளின் மனைவி சரோஜா வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் வெ.மாறன் களமிறங்கினார். இத்தேர்தலில் பதிவான வாக்குகள் ஞாயிறு அன்று எண்ணப்பட்டது.

Saroja and Jayalalitha

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே சரோஜா, முன்னிலை பெற்று வந்தார். 21வது சுற்று முடிந்த நிலையில் திமுக வேட்பாளர் மாறனைவிட 78,116 வாக்குகள் அதிகம் பெற்று தேர்தலில் வெற்றிப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் இன்று சட்டப்பேரவைத் தலைவர் தனபால், முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் முன்னிலையில், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து சரோஜா வாழ்த்துப் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+