சசி பெருமாள் உடலை வாங்க மறுத்து ஊர் திரும்பிய உறவினர்கள்- மகன் உண்ணாவிரதம்
கன்னியாகுமரி: மதுவிலக்கு அமல்படுத்துவது பற்றிய அறிவிப்பை அரசு வெளியிட்டால் மட்டுமே உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறி சசிபெருமாளின் உறவினர்கள் சேலத்திற்கு புறப்பட்டு சென்று விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சசிபெருமாளின் மகன் சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் திடீரென உயிரிழந்தார். அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரது உடலை வாங்குவதற்காக அவரது சகோதரர், மகன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தினர்.

தொடர் போராட்டம்
தொடர்ந்து அவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சசிபெருமாள் உறவினர்களுடன் மாவட்ட ஆட்சியர் சஞ்சன் சிங் சவான் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வழிப்பாட்டு தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒரு மாதத்தில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

உடலை பெற மறுப்பு
அப்போது, நீங்கள் சென்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளின் பட்டியலை எடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த சசிபெருமாள் உறவினர்கள், நீங்கள் சொன்னால் போதாது, தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். அப்படி அரசு அறிவித்தால் மட்டுமே உடலை வாங்கிச் சொல்வோம் என்று கூறினர்.

நிதி உதவி வேண்டாம்
மேலும், மாவட்ட நிர்வாகம் எவ்வளவு நிதியுதவி வேண்டும், உடலை கொண்டு போகும் செலவை ஏற்கிறோம் என்று கூறி கொச்சைப்படுத்துகிறார்கள். எங்களுக்கு அரசு சலுகை வேண்டாம், எங்களது கோரிக்கையை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்றும் சசிபெருமாளின் உறவினர்கள் கூறினர்.

சொந்த ஊர் திரும்பினர்
மாவட்ட ஆட்சியர் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் கொள்கையில் சசிபெருமாள் உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதையடுத்து, அவர்கள் சொந்த ஊரான சேலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

அதிரடிப்படை குவிப்பு
சசிபெருமாள் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையை சுற்றி அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது.

சேலத்தில் உண்ணாவிரதம்
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி காந்தியவாதி சசிபெருமாள் மகன் நவநீதகிருஷ்ணன் சேலம் காந்தி சிலை அருகில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications