சசிகலா பேனர்கள் அகற்றம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இந்த விஷயம் தெரியுமா?
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.
சென்னை: ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. சசிகலா பேனரை கிழித்த நபரையே அடித்து துவைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதற்கு என்ன மாதிரியான ரியாக்ஷன் கொடுக்கப் போகிறார் என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா பேனர்களை அகற்றி அதிமுக தலைமைக் கழகத்தின் புனிதத்தை காப்பாற்றுமாறு ஓபிஎஸ் அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் நேற்று முன் தினம் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு எடப்பாடி அணி மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரன் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

சசிகலா பேனர்கள் அகற்றம்
இதைத்தொடர்ந்து இன்று காலை விடிந்தும் விடியாததுமாக சென்னை ராயப்பேட்டை தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்கள் அகற்றப்பட்டன. ஓபிஎஸ் அணியினர் நிபந்தனை விதித்திருந்த நிலையில் பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன.

அப்போ அடித்த துவைத்த அமைச்சர்
கடந்த பிப்ரவரி மாதம் சென்னை க்ரீன்வேஸ் சாலையில் சசிகலாவை வாழ்த்தி வைக்கப்பட்டிருந்த பேனரை அக்கட்சியின் கரை வேட்டி கட்டியிருந்த நபர் ஒருவர் கிழித்து வீசினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அந்த நபரை அடித்து துவைத்தார்.

வைரலாக பரவிய வீடியோ
உனக்கும் சின்னம்மாவுக்கும் என்ன பிரச்சனை என்றும் யார் பேனரை கிழிக்க கூறியது என்று கூறி சரமாரியாக தாக்கினார். இந்த வீடியோ காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவியது.

சசி அவுட், ஜெ. இன்
இந்நிலையில் சசிகலாவின் பேனர்கள் இன்று ஊர் அறிய அவரது ஆதரவு அணியினராலேயே கிழித்தெறியப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த பேனர்கள் அனைத்தும் அகற்றப்பட்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

ராஜேந்திர பாலாஜிக்கு தெரியுமா?
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்ன சொல்லப் போகிறார் என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரை சமூக வலைதளங்களில் மக்கள் விளாசி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications