சட்டமன்றம் என்றுக்கூட சொல்ல தெரியாத சசிகலா... மக்கள் கிண்டல்

அதிமுக முதல்வராக ஓபிஎஸ் உடன் போட்டி போட்டுக் கொண்டு இருக்கும் சசிகலாவுக்கு சட்டமன்றம் என்று கூட சொல்ல தெரியவில்லை என மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா 'சட்டர மன்றம்' என்றே பல இடங்களில் குறிப்பிட்டு வந்தார். இதனால் முதல்வராக போட்டி போட்டு கொண்டிருக்கும் சசிகலாவுக்கு சட்டமன்றம் என்று கூட சொல்ல தெரியவில்லை என மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

ஜெயலலிதாவின் தோழியாக இருந்த சசிகலா, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று அதிமுகவை கைப்பற்றினார். இதையடுத்து மன்னார்குடி கும்பலின் வசமானது அதிமுக.

Sasikala couldn't say satta mandram : public making fun

இதைத்தொடர்ந்து ஆட்சியையும் கைப்பற்ற முயன்ற மன்னார்குடி கும்பல் முதல்வர் ஓபிஎஸிடம் மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றுள்ளனர். மன்னார்குடி கும்பலின் அட்டகாசம் அதிகரிக்கவே வெகுண்டெழுந்த ஓபிஎஸ் மன்னார்குடி கும்பலுக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதையடுத்து அதிமுக இரண்டாக பிரிந்து ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு பிரிவாக உள்ளது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறிவிடுவார்களோ என பீதியடைந்த சசிகலா எம்எல்ஏக்கள் அனைவரையும் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைத்துள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா சட்டர மன்றம் சட்டர மன்றம் என்றே கூறி வந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் சட்டமன்றம் என்று கூட சசிகலாவுக்க சொல்ல தெரியவில்லை வார்த்தைக்கு வார்த்தை சட்டர மன்றம் என்றே கூறுகிறார் என கிண்டலடித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+