சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள்... திருச்சி எம்பி குமார் பொளேர்
சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகள் போல் செயல்படுகின்றனர் என்று திருச்சி எம்பி குமார் தெரிவித்தார்.
திருச்சி: சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளை போலவே செயல்படுகிறார்கள் என்று தினகரனால் கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்ட திருச்சி எம்.பி குமார் காட்டமாக தெரிவித்தார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகு, தினகரன் தலைமையிலான அணி தலைத்தூக்க தொடங்கிவிட்டது. அதன் முன்னோட்டமாக ஆளுநரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் முதல்வருக்கு எதிராக மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் 19 பேரும் புதுவையில் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்த நாள் முதல் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளின் கட்சி பதவிகளை தினகரன் பறித்து வருகிறார்.
இந்நிலையில் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்த திருச்சி எம்.பி குமாரை நீக்கி தினகரன் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருச்சியில் எம்பி. குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், சசிகலாவும், தினகரனும் மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளாக செயல்படுகின்றனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக இருவரும் கட்சியை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும்.
தினகரனுக்கு பித்தம் முற்றிவிட்டது. அதனால் தொண்டர்கள் அனைவரும் அவருக்கு எலுமிச்சை பழங்களை அனுப்புங்கள். புதுவையில் 21 எம்எல்ஏ-க்களை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டி வருகிறார்.
கட்சியையும், ஆட்சியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக கொண்டு செல்கிறார். ஜெயலலிதா மறைந்த பிறகு, சுப்பிரமணிய சுவாமி சசிகலாவை நல்லவர் என்கிறார். இவ்வாறு எம்பி குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications