துக்க வீட்டில் குதூகலமாக கை கோர்த்த தினகரன் - திவாகரன்! எடப்பாடி அரசுக்கு நெருங்கும் ஆபத்து!!
துக்க வீடு என்றும் பார்க்காமல் தினகரனும் திவாகரனும் குதூகலமாக கை கோர்த்திருப்பது எடப்பாடி அரசுக்கு ஆபத்து நெருங்கிவிட்டதையே சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.
மன்னார்குடி: சசிகலாவின் அண்ணி சந்தானாலட்சுமி இறப்பு துக்க நிகழ்வில் எதிரும் புதிருமாக இருந்த தினகரன், திவாகரன் மிகவும் மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி ஆனந்த கண்ணீர் சிந்தினர். இவர்களது இந்த இணைப்பானது எடப்பாடி அரசுக்கு ஆபத்து வருகிறது என்பதையே வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
சசிகலா மற்றும் திவாகரனின் அண்ணி சந்தானலட்சுமி நேற்று காலமானார். சந்தானலட்சுமியின் மகள் அனுராதாவைத்தான் தினகரன் திருமணம் செய்துள்ளார். சந்தானலட்சுமியின் மகன்தான் டாக்டர் வெங்கடேஷ்.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவை யார் கைப்பற்றுவது என்கிற அதிகாரப் போட்டியில் ஒட்டுமொத்த சசிகலா குடும்பமே ஆளுக்கொரு திசையில் எதிரிகளைப் போல பிரிந்து நின்றது. சசிகலாவும் தினகரனும் சிறைக்குப் போன நிலையில் திவாகரனை உதறிவிட்டு எடப்பாடி தனி கோஷ்டியானார்.

ஒன் இந்தியா சொன்னது
அண்மையில்தான் சசிகலா கணவர் நடராஜன், திவாகரன், தினகரன் மூவரும் ராசியாகி எடப்பாடி அரசை தூக்கி எறிய வியூகம் வகுத்தனர். இதை கடந்த வாரமே நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் பதிவு செய்திருந்தது.

சந்தானலட்சு காலமானார்
இந்நிலையில் சசிகலா, திவாகரனின் அண்ணி சந்தானலட்சுமி நேற்று காலமானார். இந்த இறப்பு நிகழ்வுக்கு இன்று தினகரன், திவாகரன் ஆகியோர் வந்தனர். இவர்கள் டாக்டர் வெங்கடேஷூக்கு ஆறுதல் தெரிவிக்கும் போது மூவரும் மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்தனர். பின்னர் மூவர் கண்ணீர் சிந்தியதைப் பார்க்க முடிந்தது.

அரசியல் பேசிய திவாகரன், தினகரன்
துக்க வீடு என்றும் பார்க்காமல் தினகரனும் திவாகரனும் அரசியல் பேசவும் தயங்கவில்லை. அத்துடன் எடப்பாடி அரசு சிறப்பாக செயல்படுகிறது எனவும் போகிற போக்கில் சொன்னார் திவாகரன்.

எடப்பாடி அரசுக்கு ஆபத்து
அதிமுகவும் ஆட்சியும் எடப்பாடி மற்றும் கொங்கு அமைச்சர்கள் வசம் போய்விட்ட நிலையில் எப்படியும் இரண்டையும் மீட்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் கை கோர்த்துள்ளனர். ஆகையால் தினகரன் ஏற்கனவே ஆகஸ்ட் 5 வரை கெடு விதித்துள்ளார். இந்த கெடுவுக்கு பின்னர் அதிமுகவில் புத்ய பிரளயம் வெடிக்கலாம் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications