சசிகலாவால் அதிமுகவை வழி நடத்த முடியும் - ஜெ.அண்ணன் மகன் தீபக் பரபரப்பு பேட்டி
சசிகலாவால் அதிமுகவை வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என தீபக் தெரிவித்துள்ளார்.
சென்னை: சசிகலாவால் கண்டிப்பாக அதிமுகவை வழி நடத்த முடியும் என ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் தந்தி டிவிக்கு ஒரு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் முதல்வர் ஜெயலலிதாவுடனான தனது உறவு மற்றும் சசிகலா குடும்பத்தாருடனான உறவு குறித்து கூறியுள்ளார். பேட்டியின் இறுதியில், சசிகலாவால் அதிமுகவை வழி நடத்த முடியும் எனக் தெரிவித்துள்ளார்.

அதிமுக கட்சி ராணுவ கட்டுப்பாடு கொண்ட கட்சி. அதனால் யார் முதல்வர் என்பது பற்றியும் கட்சியின் தலைவர் யார் என்பதையும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் முடிவு எடுத்து சசிகலாவை ஏற்றுக்கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன். தினசரி வாழ்க்கையில் அத்தையுடன் கடந்த 35 ஆண்டுகளாக சசிகலா இருந்துள்ளார்.
கட்சியினர் அனைவரையும் சசிகலாவுக்கு நன்றாக தெரியும். அதனால் அவர்களால் அதிமுகவை கண்டிப்பாக வழிநடத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார் தீபக். சசிகலாவின் குடும்ப கட்டுப்பாட்டில் இருப்பதாக பேசப்படுவது குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, யாருடையை கட்டுப்பாட்டிலும் இருக்கு முடியாது. என் மனதில் தோான்றியதை பேட்டி அளிக்கிறேன். யாருடைய கட்டுப்பாட்டிலும் இருக்கவும் மாட்டேன் என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications