தீர்ப்பு பாதகமாக வரும் என்பதால் தான் இரவே கூவத்தூரில் தங்கினாரா சசிகலா?
தீர்ப்பு பாதகமாக வரும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் சசிகலா நேற்று இரவே கூவத்தூரில் தங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தீர்ப்பு பாதகமாக வரும் என்பதை முன்கூட்டியே அறிந்துதான் சசிகலா நேற்று இரவே கூவத்தூரில் தங்கினார் என தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டால் எம்எல்ஏக்களை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்பதாலேயே அவர் நேற்றிரவு கூவத்தூரில் தங்கினார் என கூறப்படுகிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்களாக அவர்களை சந்தித்துவிட்டு சசிகலா போயஸ் கார்டன் திரும்பினார்.
ஆனால் தீர்ப்புக்கு முந்தைய நாளான நேற்று கூவத்தூர் சென்ற சசிகலா நேற்றிரவு அங்கேயே தங்கினார். இன்று உச்சநீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளிப்பதாக அறிவித்ததையடுத்து சசிகலா இந்த முடிவை எடுத்துள்ளார்.

எம்எல்ஏக்களை சந்திக்க முடியாது
தீர்ப்பு தனக்கு எதிராக வந்தால் உடனடியாக சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். அதன் பின்னர் போயஸ் கார்டனில் இருந்து கூவத்தூர் சென்று சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை சந்தித்து ஆலோசிக்க முடியாது.

நேற்றிரவு ரிசார்ட்டில் தங்கினார்
இதனை நேற்றே அறிந்த சசிகலா இரவே கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியுள்ளார். ஆனால் எம்எல்ஏக்களுடன் தங்குவது போன்ற தோரணையை அவர் உருவாக்கியுள்ளார்.

நிர்வாகிகளுடன் ஆலோசனை
அதிமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் அவர் கூவத்தூர் ரிசார்ட்டில் அவர் ஆலோசனை நடத்தினார். இதில சட்டசபை தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உடனடியாக சரணடைய உத்தரவு
சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர்களை உடனடியாக சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கையெழுத்தான வித்தியாசமான டீலிங்! தமிழ்நாட்டில் 5 முனை போட்டி.. யாருங்க இது புது டீம்? போட்டி தீவிரம் -
சசிகலா - ராமதாஸ் கூட்டணி வைத்தது எப்படி? இதற்கு இப்படி ஒரு பேர் வைக்க திட்டமா? அட போங்க! -
மனைவி வீட்டு வேலை செய்யாதது எல்லாம் ஒரு பிரச்சனையா? விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு!












Click it and Unblock the Notifications