கால அவகாச கோரிக்கை நிராகரிப்பு- பெங்களூரு கோர்ட்டில் இன்று மாலைக்குள் சசிகலா சரண்?
உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் தேவை என முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதால் பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலைக்குள் சசிகலா சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் சரணடைய கால அவகாசம் தேவை என்ற சசிகலாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துவிட்டது. இதையடுத்து இன்று மாலைக்குள் பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலா சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதி செய்தவர்கள்; குற்றவாளிகள் என்பதை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. சசிகலா உள்ளிட்ட மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

சரணடைய உத்தரவு
இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் ஊழல் தொடர்பாகவும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் கூட்டு சதி குறித்தும் மிகக் கடுமையாக சாடியிருந்தனர். ஜெயலலிதா மரணடைந்ததால் அவர் மீதான வழக்கு மட்டும் முடித்து வைக்கப்பட்டது. சசிகலா உள்ளிட்டோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பெங்களூரு நீதிமன்றத்தில் நேற்று சசிகலா சரணடையவில்லை. இந்த நிலையில் நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றத்தில் இன்று கால அவகாசம் கோரினார் சசிகலா.

சசி கோரிக்கை நிராகரிப்பு
நீதிபதிகள் பிசி கோஷ் மற்று அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்தான் சரணடைய கால அவகாசம் கேட்கப்பட்டது. சசிகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் துள்சி ஆஜராகி இந்த கோரிக்கையை வலியுறுத்தினார். ஆனால் நீதிபதிகள் எக்காலத்திலும் கால அவகாசமே தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டனர்.

வேறுவழியே இல்லை
இதனால் வேறுவழியே இல்லாமல் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தாக வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று மாலைக்குள் சசிகலா சரணடைவார் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications